வண்ண வண்ண மலருக்கு நடுவே ஒரு நாற்று

வண்ண வண்ண மலருக்கு நடுவே ஒரு நாற்று.


சேறுப்பட்ட காலுக்கு கொலுசிட ஆசை...

கொலுஞ்சி மிதித்த விரலுக்கு மெட்டியிட ஆசை...

மெல்லிய கணுக்காலில் கில்லி விளையாட ஆசை...

எட்டி உதைத்த பாதத்தில் பதிந்திடவே ஆசை...

கதிரருக்கும் கைகளுக்கு வண்ண வண்ண காப்பிட ஆசை...

கலையொடுக்கும் விரல்களுக்கு மோதிரம்மிட ஆசை...

கருவிழி கண்ணுக்கு கண்மையிட ஆசை...

புருவங்கள் மத்தியில் கோபுரம் கட்ட ஆசை...

கோபுரங்களின் மேலே வட்டமிடவும் ஆசை...

நெற்றிமுடியின் கீழே குங்குமம் இட ஆசை...

கோபத்தை குறைக்க மூக்குத்தி குத்திவிட ஆசை...

காதலை வளர்க்க கம்மல் குத்திவிட ஆசை...

மாநிறம் கண்டு மாலையிட ஆசை...

மஞ்சள் முகம் கண்டு மஞ்சள் தாலி கட்டிட ஆசை....


- த.சுரேஷ்.

எழுதியவர் : சுரேஷ் (21-Aug-18, 11:23 am)
சேர்த்தது : த-சுரேஷ்
பார்வை : 113

மேலே