காந்தி

நேரிசை ஆசிரியப்பா
போராட்ட மென்றபொருள் கொண்டஊரில் பிறந்தவர்
போரை தனதுவாழ்வில் அமைத்துக் கொண்டவர்
பகைவரை பொருள்கொண்டு போராடுதல் பொதுவாம்
பகைவருக்கே எதுவு மாகாமல் நமது
உரிமையை வென்றெடுக்க வன்முறை இன்றி
அறவழியில் வெல்லமுடியும் என்று நிரூபித்தவர்
மனிதரில் என்ன வேற்றுமை யாவரும்
மண்ணில் ஒன்றே என்று நிரூபித்தவர்
தனது எண்ணம்போல் சுயமாக ஒருசெயலை
மண்ணில் செய்ய முடியாமல் இருந்தது
நினைத்ததை யாவரும் தனது விருப்பப்படி
சுதந்திரமாய் செய்திடலாம் என்று நிரூபித்தவர்
தனது உயிர்பிரியும் போது தன்னை
கொன்றவர் மீது கோபபடாமல் இருந்தார்
காலங்கள் மறைந்தாலும் இங்கே
நமதுதந்தை மகாத்மா புகழ்மறை யாதே !

எழுதியவர் : ஆர் .எம் .சுப்பிரமணியன் (21-Aug-18, 6:46 pm)
Tanglish : gandhi
பார்வை : 48

மேலே