அன்புக்கு கிடைக்கும் பரிசு
என் வாழ்க்கையில் பல வழிகள் வந்தது
எந்தன் விதியின் சாபமா ?
அந்த வழியினில் நீ வந்தது
எந்தன் வாழ்வின் ஆரம்பமா ?
என் மனம் காதலென்னும்
விதையாய் மண்ணில் விழ
அதற்கு உரமாய் நீ பேசி பழகிய
உன் குணத்தையும் ,
காட்டிய அன்பையும்
இட்டு வளர்த்த காதல் மரம்
உன் கண்களுக்கு தெரிகிறதா ?
கண் இமை மூடி இருந்தால் அந்த
இமையமே அருகில் இருந்தாலும்
கண்களுக்கு தெரியாது -ஆகையால்
கண்களை திற காதலை பார்
கண்ணீர் விட்டு சொல்வாய் காதலை என்னிடம் ...!