யாருகேட்டா எட்டுவழி

எட்டுவழிச் சாலையாம்
ஏறுமுகத் திட்டமாம்
ஏழைபாழை நிலம் பறிக்க
ஏகபோக ஆதரவாம்

சேலமிருந்து சென்னைபோக
ரெண்டுமணி சீக்கிரமாம்
சீக்கிரமா போகவேண்டி
யாருக்கென்ன அவசரமாம்

ஒஞ்சொந்தம் வளங்கொழிக்க
எம்மக்க நிலம்பறிக்க
திட்டமொன்னு போடுறியே
தன்னமறந்து ஆடுறியே

கானிநிலம் காரைவீடு
கண்டதெல்லாம் வேணுமாம்
யாரிருக்கா இதகேக்க
பாவிமக்க வலிபோக்க

நிலம்பிடுங்கும் வழிப்பறிய
வளர்ச்சிசெய்யும் வன்முறைய
ஊருசேந்து தடுக்குது
அரசு அதையும் ஒடுக்குது

வாழையடி வாழையா
வாழ்ந்துவந்த பூமிஇது
இதப்பறிக்கும் பாவிகள
தட்டிகேக்கும் சாமிஎது

ஏழேழு தலைமொறையா
உழவுதான எங்கவழி
அதையும்இப்ப அழிச்சுபுட்டு
யாருகேட்டா எட்டுவழி ?

எழுதியவர் : அக்பர் ஷரிஃப் (30-Aug-18, 11:20 am)
சேர்த்தது : அக்பர்
பார்வை : 118

மேலே