என் காதல் வரமே
மலர் தரும் வாடையில்
உடல் குளித்த பூ வனமே
இடர் தரும் கோடையில்
பனிதூவும் குளிர் வானமே
அசையும் பெண்ணெளில் ரதமே
அசையாமல் என் நெஞ்சில் கொலுவிருக்கும்
பசுந்தளிர் மரமே அழகின் கனி ரசமே
குரலின் குயிலினமே
நாவூறும் தேன் சுகமே
என் காதல் வரமே
என் வாழ்வின் வளமே
என்னோடு நீ கொண்டிருக்கும்
இந்த அன்பின் பாந்தம்
நிலைக்குமா அன்பே
என்றும் அகலாமல்
இரும்போடு இணைந்திருக்கும்
காந்தம் போல்
அஷ்ரப் அலி