காத்திட வாரீர்

வீசும் தென்றலில்,
பயிர் துடித்து
அழகு கண்ட பூமியில்,

இன்று வீறும் ஆயுதத்தால்
உயிர் துடிக்க கண்டோம்.

அன்று மண்ணைக்கீறி
பொன் விதைத்தோம்.

இன்று எண்ணங்களை கீறி
இரத்தத்தை விதைக்கிறோம்.

மனங்களைஆண்டோம் அன்று.
பிணங்களை ஆளுகிறோம் இன்று .

வினைகளை விதைத்து
விளைந்த கண்ணீரில்,

பாதி மூழ்கிவிட்ட
இந்தப் பார் எனும் கப்பல் ,

காப்பாற்ற யாருமின்றி,
கணிசமாய் தள்ளாடுகிறது

எழுதியவர் : பிரின்சஸ் ஹாசினி (18-Sep-18, 2:39 pm)
Tanglish : kaaththida vareer
பார்வை : 93

மேலே