அம்மா

இதயம் மலர்ந்தேன்
இமைகள் விரித்தேன்
மகிழ்ந்து சிரித்தேன்
மழலை பேசினேன்
அம்மா...
உன்னை கண்டபோது.

அழுகை சுமந்தேன்
ஆறுதல் தேடினேன்
மனதில் பேசினேன்
மறுபடி காண ஏங்கினேன்
அம்மா...
உன்னை நினைத்தபோது.

விம்மல் வெடித்தேன்
வேதனை அடைந்தேன்
உள்ளம் சோர்ந்தேன்
உருகி மெலிந்தேன்
அம்மா...
நீ நோயுற்றபோது.

கண்ணீர் சொறிந்தேன்
கதறி அழுதேன்
வாழ்கை வெறுத்தேன்
வாடிச் சரிந்தேன்
அம்மா...
உன்னை இழந்தபோது.!!!!

எழுதியவர் : பிரின்சஸ் ஹாசினி (18-Sep-18, 7:33 pm)
சேர்த்தது : Princess Hasini
Tanglish : en anbu amma
பார்வை : 637

மேலே