இரவே இறந்துவிடாதே

இரவே இறந்துவிடாதே

இரவுகளே நீங்கள் ஏன்
இறக்கின்றீர்கள்?
இரவிதனை காண்பதற்கு
துடிக்கின்றீர்கள்!
உறக்கத்தை பாதியிலே
கெடுக்கின்றீர்கள்!
உயர்ந்து வரக்கதிரவனை
அழைக்கின்றீர்கள்!
கனவுகளை கலைத்துவிட்டுச்
செல்கின்றீர்கள்!
கடமைகளை செய்வதற்கு
அழைக்கின்றீர்கள்!
பறவைகளின் பாடல்களை
கேட்பதற்கா
பகலவனின் துணைநீங்கள்
வேண்டுகின்றீர்?
உறக்கத்தில் உயிர்கள்
உணர்வதில்லை கவலைகளை.
உறக்கத்தை நீட்டிக்க
உன்துணை நாடுகின்றோம்.
இரவே இறந்துவிடாதே !
எங்கள்கவலைகள் இறக்கும்வரை
உறக்கத்தை கலைத்திடாதே !
எங்கள்கவலைகள் கலையும்வரை!

எழுதியவர் : கவி இராசன் (18-Sep-18, 10:38 pm)
சேர்த்தது : கவி இராசன்
பார்வை : 113

மேலே