பெண்மையின் வலி
கருவறையில் கருவாகி
உதிரத்தில் உருவாகி
என் அடி வயிற்றில்
நீ வளர்வது எப்போது???
மூன்னூறு நாள்
கர்பத்தில் சுமந்து
என் பூ உடல் நோகாமல்
நீ பூப்பது எப்போது???
முக்கடல் மூழ்காமல்
நான் முத்தக் கடல் மூழ்கி
உனை முத்தெடுப்பது எப்போது???
என் முத்து மகனே!
என் உடல் கிழித்து
உதிரம் சிந்தி
நீ பிறப்பது எப்போது???
நீ உருவாகுவாய் என்று
உயிருடன் வாழ்கிறேன்!!!
❤சேக் உதுமான் ❤