காதல் தோல்வி

உன் நினைவை மறக்க மூலை சொல்கிறது
உன்னை மட்டுமே நினைக்க என் நெஞ்சம் துடிக்கிறது..
நீருக்குள் மூழ்கிய தாமரையாய்
நான் வெளியே சிரித்து, உள்ளே
உன் நினைவென்னும் போதையில் மூழ்கி தவிக்கிறேன்..
உன்னை காதலித்த பாவத்திற்காக
மது என்னும் பரிகாரத்தை தினம் தினம் செய்கிறேன்..
ஆனால் உன் நினைவு மட்டும் என்னுள் இருந்து
நீங்கிய பாடு இல்லை..
என் படுக்கை தலையணையில் தான் எத்தனை ஈரங்கள்
அதில்
ஒரு துளியேனும் உன் உள்ளத்தில் இருந்திருந்தால்
உன்னோடு நான் இன்று கை கோர்த்து உறங்கி இருப்பேன்..