பார்வை

நான் உன்னைப் பார்க்க நீ என்னை,
இப்படி நாம் தினம் தினம் பார்த்துக்கொள்கின்றோம்
ஒருவரை ஒருவர் தினம் தினம்;
என் கண்களின் பார்வையில் ' நான்
உன்னை நேசிக்கின்றேன்' என்று வடித்திருக்கே அது ஏன்
உன் கண்களுக்கு இன்னும் புரியலையே பெண்ணே
எத்தனைநாள் காத்திருப்பேன், இதோ
கேட்டுவிட்டேனடி உன்னை ..............
அதற்கு இத்தனை நாள் பேசாத நீ தந்த பதில்
'இன்னும் என்ன சொல்லவேண்டும்
இத்தனை நாள் என் பார்வை உன் பார்வையோடு
சேர்ந்திருப்பதே உன்னை என் மனம் நாடுதே
என்றுதானே அர்த்தம், இது ஏன் உன் பார்வைக்கு
புரியலையே ' என்று, நான் பேசாதிருந்தேன்...'

அவள் பதில் தந்த இன்ப அதிர்ச்சியில் .......நான்,
இதோ இந்த விநாடிமுதல் நாங்கள் காதலர்கள்,
எங்கள் பார்வை காதல் பரிவர்த்தனையில்
நெஞ்சம் திறந்து இப்போது மௌனமும் மறைந்து
இப்போது அவள் என்முன்னே பேசும் பொற்சிலையானாள்,
இன்றுமுதல் சொல்வேன் எந்தன் காதல் தேவதையாய்.

இதோ, எங்கள் காதல் பயணம்..............
பார்வையைத்தாண்டி இன்பலோகம் நோக்கி
போய்க்கொண்டிருக்கிறது.......வாயுவேகமாய்.....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Sep-18, 10:09 am)
Tanglish : parvai
பார்வை : 375

மேலே