முதல் தாய்மொழி மூவாத முத்தமிழ் - அமிசதொனி

மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய 'இசைத் தமிழ்க் கலம்பகம்' என்ற நூலிலிருந்து 'முதல்தாய்மொழி மூவாத முத்தமிழ்' என்ற 'அமிசதொனி' ராகப் பாடலைத் தருகிறேன்.

'ரகுநாயக' என்ற மெட்டு - தாளம் - முன்னை

பல்லவி:
.
முதல்தாய்மொழி மூவாத முத்தமிழ்
பேதைத்தமிழரால் பிறங்கா* தமிழ்

துணை பல்லவி:

முதுநாள் நிலத்தென் முனையேநிகழ்
முதன் மாந்தர் வாயின் முளையா முகிழ் (முதல்)

சரணம்:

வடுகாய் முன்தோன்றி வடநாவலே
வளராரியத்தின் கிளைகள்பின் பல்கிக்
குடமேற் பலகுடும் பாகிய
கோலங் கொண்டபின்னும் குமரியா மன்னும் (முதல்)

- மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Sep-18, 1:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 228

சிறந்த கட்டுரைகள்

மேலே