கண்ணன் ராதை

குழலூதும் ஓசையாலே
குமரியவள் வந்தாளே
குழலுடைய மயக்கத்திலே
தனைமறந்து நின்றாளே
குமரனவன் தோள்களையே
குளிர்கரத்தால் தொட்டாளே
குழலதைத்தான் விட்டுவிட்டு
குலமகளைப் பற்றினானே

எழுதியவர் : (26-Sep-18, 11:56 am)
சேர்த்தது : வினோத்
பார்வை : 355

மேலே