கருவிலடங்கா கரு
உன் பார்வை பட்டதும்
என்னுடம்பின்
ரோமத் துளைகள் வழியே
சிறு வியர்வைத் துளியும் துளிர்த்தது ..
அத்துளி கொஞ்சம்
துள்ளிக்குதித்து உன் காலடியில் சரணமடைந்தது ..
உன் மென்மை பெண்மை
அத்துளிக்கு மேண்மை கொடுத்தது ..
உன் ஒளிப் பார்வையில்
உயிர் பெற்று
இப் பூமியில் புத்துயிராய் பூத்தது ...
உன் கையில் நீ ஏந்தி
கொஞ்சிட ..
மீசையும் முளைத்து
புது பாஷையும் பேசியதே !!!!!