காந்திஜியை வணங்குவோம்

காந்திஜி
கம்பு ஒன்று கையில் உண்டு
கதராடை மேனியில் உண்டு
சுற்றும் ராட்டையில் நூலும் உண்டு
தேசத்தின் நலன் மனதில் உண்டு
வலிமையான உள்ளம் உண்டு
வணங்காத தலையும் உண்டு
வன்முறையைச் சாடியதும் உண்டு
கொடுமையைச் சந்தித்ததும் உண்டு
துயர் தாங்கும் நெஞ்சமும் உண்டு
வந்தேமாதரம் என்ற தாரக மந்திரம் கொண்டு
மக்களை எழுச்சி கொள்ள செய்து
வெடி கொண்டு வந்த வெள்ளையனை
அஹிம்சை எனும் அம்பு கொண்டு
அறவழி போராடி விரட்டி அடித்து
சுதந்திரத்தை நமக்களித்த தேசத்தந்தை
காந்தியடிகளை வாழ்த்தி வணங்கிடுவோமே!

எழுதியவர் : கே என் ராம் (2-Oct-18, 3:54 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 96

மேலே