மல்லிகையை

மல்லிகையை . . .
*********************************

மல்லிகையை சங்கென்று வண்டினங்கள்
ஊதிநிற்கும் கடம்பவன நாயகியே
உள்ளத்தில் சோகமுடன் உனைநாடி
வந்தோர்க்கு அதுதீர்க்கும் மூகாம்பிகே
அல்லல்பல நேர்ந்தோர் பட்டூரில்
உனைத்தொழவே அதுகளையும் சாலாட்சியே
எள்ளளவும் உணைமறவா குணங்கொண்ட
மாந்தரை கரம்பற்றி அணைத்திடுவாய் !

எழுதியவர் : சக்கரைவாசன் (2-Oct-18, 6:31 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 56

மேலே