என்னில் நீ
வாழா என் வாழ்வை வாழவே...
மீளாமல் உன்னுள் போகிறேன்...
உன் மூச்சின் வெப்பம் தீண்டவே விழி மூடி மூர்ச்சை ஆகிறேன்...
கண்ணீரில் கலங்கிய காலங்கள்
போனதே....
கலங்காமல் பாதை உன்னுடன் நீளுதே...
உன் நெஞ்சம் என்னில் வாழுதே...
ஒரு முகை வீழாமல் விரியுதே...
அதன் வாசம் என் நாசி வழி நுழைந்து
விலா எலும்பு தடவி எனை சிலிர்க்கச் செய்யுதே....