காதல் வலி

நெஞ்சங்கண்ட காயத்திற்குப்
“பஞ்சு கொண்டு மருந்திட்டால்
கொஞ்சமேனும் வலித்திடுமோ?”

தயிரியமாய் முன் வந்து
உயிரிரு கண்வழி கலந்து
மயிலிறகால் மருந்திட்டாய்...

“செத்துப் பிழை” தினமுமெனக்
கத்தியதால் குத்தியதோர்
மெத்தவலி தந்திங்கே
சத்தமின்றி யெனைவிட்டுச்

சென்றதெங்கே...?

~தமிழ்க்கிழவி

எழுதியவர் : தமிழ்க்கிழவி (15-Oct-18, 4:10 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 3295

மேலே