தப்புத் தாளம்

அன்றொருநாள் மகள் கேட்கிறாள், யாரையாவது ப்ரியப் பட்டிருக்கிங்களாப்பா ன்னு. புதைத்த இடத்தில் பூமுளைத்து,
அவை இரண்டோ மூன்றோ தலைமுறைக் கண்டிருக்கும். ஒரு மரணம் தாண்டிய
வலிப் பூக்களின் வாசனையால் கூட என்னை இப்படி வெட்கப்படவைக்க முடியுமா யோசிக்கிறேன். துளிக் கண்ணீர். ஏக்கம் கலந்த ஒரு மெளனப் பெருமூச்சு. சிந்தனைச் சாய்தல் என எதுவுமே அற்றாதக் கேள்வி அது.
கடினம் காணாத, கனம் கோர்த்த அந்த வார்த்தைகள் இனி தொடரும் முன்பே சுதாரித்துக் கொண்டேன்.
அறையின் அடர் மெளனத்தை,
ஒரு நேர்க்கோட்டில் கிழித்துப்போன
முதல் டெலிஃபோன் சத்தம்
யாருடையதாய் இருந்திருக்கும்
பேசிக்கொண்டே இருக்கிறவளிடம்
சற்று இடைநிறுத்தி
நீ ரொம்ப அழகா இருக்கேன்னு சொல்லும்போது
அடுத்தடுத்த மைக்ரான் நொடிகள்
அவளிற்குள்
வீணை மீட்டிக் கொண்டிருக்கும்தானே..
நீடித்திருக்கும்
அதிகக் காலங்களின்போது
அவளறியாமலேயே
யேதோ ஒன்று பிடிக்கக் காணும்
கண்டுவைத்த
எல்லாவற்றையும்
அழகாக்கிச் சொல்லிவிட
நேரம்பார்த்து
கவிதையொன்று தடசமுரிக்கும்
""உன்னுடையக் கழுத்தில்
வலது பாகத்திலுள்ள கருத்தமுத்து
தானறியாதே அதை
எத்தனைதடவை
திருட்டுத் தனமாய்ப் பார்க்க
மெனக்கெட்டிருப்பேன் தெரியுமா ம்..
கருந்திரளிப் போலுள்ள
உன் கண்களைக் குறித்து
நானொரு ஒண்ணாந்தர
இங்க்ளீஷ் கவிதை எழுதிய விபரம்
நீ அதை அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்..
பலப்போதும்
நீ என்
முன்பில் வந்து நிற்கும்போது
ஒரு மினியேச்சர் ரூபம்போலவே
காட்சியளித்திருந்தாய்
அப்போதெல்லாம்
உன்னை என் கையில்
வாரிக் கோரி எடுத்துக் கொண்டு
யாரும் இல்லாத
இடத்திற்குக் கொண்டுப் போயின்னு
சொல்லிமுடிக்கும் முன்னமே
வாய்மூச்சும் விரல்களும்
சேர்ந்தே தாளமிட
தொலைப்பேசி அணைத்திருப்பாய்தானே"
அனுசரன்