தாத்தாக்களின் ஓட்டம்

என்னடா மணியா, நம்ம ஊரு தாத்தாக்கள் எல்லாம் தலைதெறிக்க ஓடறாங்க?

நேத்து பட்டணத்தில இருந்து ஒரு சமூக சேவகி வந்துச்சு. நம்ம ஊரு பாட்டிங்களக் கூப்பிட்டு உக்காரவச்சு பேசிட்டு இருந்துச்சு. அது விசாரிச்சதுல இருபது பாட்டிமார்கள் சில உண்மைகளச் சொன்னாங்களாம்.

என்ன உண்மை?

அவுங்கெல்லாம் சின்னப் புள்ளைங்களா இருக்கறப்ப நம்ம தாத்தாமாருங்கெல்லாம் 18 வயசு கட்டிளங் காளைகளாம். சில்மிஷ மன்னர்களாம். அவுங்கள பலர் நம்ம பாட்டிமார்களுக்கு அந்தக் காலத்தில பாலியல் தொந்தரவு தந்தவங்களாம்.

சரி நம்ம தாத்தாக்கள் ஏன் கிராமத்தவிட்டு ஓடறாங்க.

அந்த சமூக சேவகிப் பொண்ணு தொலைக்காட்சி நிருபர்களையெல்லாம் அழச்சிட்டு
நாலு மணிக்கு நம்ம ஊருக்கு வருதாம். நம்ம பாட்டிமார்கள் அந்தக் காலத்தில பாலியல் தொந்தரவு குடுத்தவங்க பேரையெல்லாம் சொல்லப் போறாங்களாம். அவுங்க பேட்டிய எல்லாத் தொலைக்காட்சிக்காரங்களும் நேரலை ஒளிபரப்புச் செய்யப்போறாங்களாம்.

அய்யய்யோ, நம்ம தாத்தாக்கள நெனச்சா பரிதாமா இருக்குதடா.

அதுக்கு நாம என்னடா செய்யறது.

எழுதியவர் : மலர் (18-Oct-18, 11:27 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 51

மேலே