நீங்கலாம் நல்லா வருவீங்க

காட்சி 1.
அவள் 1: டே..இந்த பூ அழகா இருக்குல?
அவன் 1: ம்..அழகா இருக்கு.
அவள் 1: என்ன அழகா இருக்கு? நான் என்ன சொன்னாலும் மண்டைய ஆட்டுவியா நீ? பக்கி !

காட்சி 2.
அவள் 2:  டே..இந்த பூ அழகா இருக்குல?
அவன் 1: (அய்யயோ!) ம்.. இல்ல... அழகா இல்ல...
அவள் 2: என்ன அழகா இல்ல? அப்ப நான் சொல்றது தப்பா? என்ன சொன்னாலும் ஏன்டா ஒத்துக்கவே மாட்டேங்குற? நாயே!

காட்சி 3.
அவள் 3:  டே..இந்த பூ அழகா இருக்குல?
அவன் 1: (செத்தான் சேகரு!) இருக்கு. ஆனா.. கீழ நல்லா இல்ல. 
அவள்3 : ஏன்டா என்ன சொன்னாலும் நொட்ட சொல்ற. அப்ப எங்கிட்டயும் எதாச்சும் குறை இருந்தா இப்டிதான் குத்தி காட்டுவியோ? பன்னி !

காட்சி 4.
அவள் 4:  டே..இந்த பூ அழகா இருக்குல?
அவன் 1: (நாசமா போவ!) ம்..அ...ப்...பு...இ...ஓ..
அவள் 4: டேய்.. ஒன்னு ஆமா னு சொல்லு.. இல்ல இல்லைனு சொல்லு... மூதேவி !ஒனக்குனு ஒரு சுயசிந்தனையே கிடையாதா? ஒன்னலாம் எவ டா கட்டிக்குவா? எரும !

காட்சி 5.
அவள்:  டே..இந்த பூ அழகா இருக்குல?
சௌந்தர்: புஜ்ஜி..உன்ன விடவா?
அவள்: டேய்..சொல்லுடா..
சௌந்தர்: அத விடு.. ஷாப்பிங் போலாமா?
அவள்: ஓகே! ஓகே!

காட்சி 6.
அவள் 5:  டே..இந்த பூ அழகா இருக்குல?
அவன் 1: (ஒன் தலயில இடி விழ!) பஜ்ஜி…..ப்தூ.... புஜ்ஜி.. உன்ன விடவா?
அவள் 5: இந்த கதையெல்லாம் இங்க உடாத.. பதில சொல்லுடா பரதேசி !
அவன் 1: (ஆனா...நீங்கலாம் நல்லா வருவீங்கடி... நல்லா வருவீங்க!!)....

எழுதியவர் : முகவை சௌந்தர ராசன் (19-Oct-18, 1:39 am)
பார்வை : 105

மேலே