அந்திமல்லி
மல்லி பேசுகிறது
என் தாய் வீடு மாமதுரை
என்னை கையில்
சூடியிருப்பார் மைனர் துரை
பெண்ணின் கூந்தல் ஏறும்முன்
என் பெயர் மல்லிகை
உதிரும் போது என் பெயர் மூலிகை
நான்தான் நீங்கள் மணம்
முடிக்கும் பெண்ணிற்கு
மணம் தருபவள்
என் அழகிற்கு
தன் தேரைக் கொடுத்தான் பாரி
பூ என்னுள் இனிப்பு
தேன் குடிக்கும் பார் ஈ
பாண்டியனின் சந்தேகத்திற்கு
என் வெண் தேகமே காரணம்
என் மனம் தொட்ட காற்று
மட்டுமே மணம் பெறுகிறது
மூவண்ணம் நம் கொடியில்
பூ வண்ணம் என் கொடியில்
நான் முள் அரும்பாய்
இருந்தும் யார் மனதையும்
உங்களைப்போல் காயப்படுத்தியதில்லை