நான் உன்னை நேசிப்பதால்......
உனக்காக மட்டும் சிரிக்கத் துடிக்கும் என் இதழ்கள்..
உன்னை மட்டும் பார்க்கத் துடிக்கும் என் கண்கள்...
உன் குரல் கேட்க மட்டுமே துடிக்கும் என் செவிகள்...
உன் அழைப்பிற்காக மட்டுமே காத்திருக்கும் என் கைபேசி ...
உனக்காக என்னை நான் மாற்றியவை...
உனக்காக நான் இழந்த வாழ்க்கை...
இதில் எதுமே உனக்கு மட்டும் தெரியாமல் போனதா...
...
நேசிப்பது நான் மட்டுமே என்று எனக்கு தெரியாமல் போனது...
.
.
நீ நேசிப்பதோ வேறொரு நெஞ்சம் என்ற போது ....
நேசிக்கிறேன் உன்னை மட்டும் அல்ல...
உன் காதலையும் நீ நேசிக்கும் இதயத்தையும்...