கனவின் நிறம் கருப்பு
என் வீட்டு திண்ணையில் தினம்
தினம் அமர்ந்து திகட்டாமல் உனை ரசித்தேன்...
உன் பஞ்சு பாதங்கள் மிதக்கும்
அழகினில் என் உலகம் சுழலாமல்
சொக்கி நிற்கிறது...
யார் சொன்னது பூமிக்கு ஒற்றை நிலவு என்று....
என் தெருவோர பால்வெளியில் இரு வெண்ணிலவு....
நீ பொழியும் குளிரின் இரவில்
விறைத்தபடி நான் புரண்டுகிடக்க...
இந்த இரவின் நீளத்தை குறைக்க உனை பார்த்து கொள்கிறேன்
என் கருப்பு கனவின் வெண்ணிலவாய்...