மரணப் பிடியில் மனிதனின் சிந்தனை

வாழ நினைக்கும்போது
வாழ்க்கை புரிவதில்லை
வாழ்க்கை புரியும்போது
வாழ முடிவதில்லை
உன்னுடையதென்றாலும்
உரிமை கிடைப்பதில்லை
உரிமை கிடைத்தாலும்
உடைமை ஆவதில்லை
எல்லாம் கிடைத்தபின்பு
எதிலும் பற்று இல்லை
உயிர் பிரியும் நேரத்தில்
உதித்த ஞானமிது

எழுதியவர் : நாங்குநேரி வாசஸ்ரீ (21-Oct-18, 10:24 am)
பார்வை : 1781

மேலே