வித்தைக்காட்டி

ஏதோ ஒரு' மெய்யை' விற்று
பொய்யை மெய்யாக்கி
கண்மூடு வித்தையால், பாமரரை
ஏமாற்றி வயிற்றை கழுவிக்கொள்கிறான்
டவுனில் வாரத்தில் ஒரு நாள்
தலைகாட்டும் வித்தைக்காரன்
இவன் எப்போதும் கையில் வைத்திருப்பது
ஒரு பெட்டியில் அடைக்கப்பட்ட
நச்சுப்பல் இல்லா நாகம்
மற்றும் ஒரு கீரிப்பிள்ளை
' முடிவு வரை இருந்து கீறி-நாகம்
சண்டையைப் பார்த்துவிட்டு போங்க .
என்று கூறிக்கொண்டே அதைக் காட்டாமல்
நழுவிவிடுவான்.......வித்தைக்காரன்
ஏதோ 'மெய்க்கொண்ட தாயத்தை.
பாமர மக்களிடம் விற்றுவிட்டு ..........


வித்தைக்காரன் 'டெக்னீக்' இன்று
பல பெரிய புள்ளிகள் பயன்படுத்துகிறார்கள்
இவர்கள் காட்டுவேன் என்பது
'கீறி-பாம்பு' சண்டை இல்லை; மாறாக
'இது செய்திடுவேன்', 'அது செய்துவிடுவேன்'
என்ற பொய்ப்பேச்சு.............
மக்களை ஏமாற்ற ......இவர்கள் விற்பது
அந்த 'வித்தைக்காரன் மெய்க் கூட இல்லை
இவர்கள் பொய் சொல்லி வாங்குவது
வோட்டு, வோட்டு , அதன் மூலம்
'ஆட்சி', 'ஆட்சி' இவர்கள் கையில்
இதில் 'கீறி' யார், 'நாகம்' யார் ...........

இவர்களும் வித்தைக் காட்டுபவரே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Oct-18, 3:38 pm)
பார்வை : 74

மேலே