காதல்

என்னை ஏதும் எழுதா
புத்தகமாய்ப் பிரித்தான்
அதில் தன் காதலை
கவிதையாய் நிறைத்து
நிறைந்த மனதோடு
ஒரு கவிதா புத்தகமாய்
மூடிவிட்டான்............
இப்போது மீண்டும்
புத்தகம் என்னை அவன்
திறந்து புரட்டி பார்ப்பதேனோ
புத்தம் புது புத்தகமே என்று
சொல்வதேனோ ........
ஓ, புரிந்தது , அவன்
கண்ணிற்கு நான் என்றும்
எப்போதும் புதிய புத்தகமே
என்னைப் புரட்டி பார்க்கும்
காதலன் (கவிஞன்) அல்லவோ
அவன் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Oct-18, 3:11 am)
Tanglish : kaadhal
பார்வை : 105

மேலே