மாவீரர் மருதிருவர் போற்றுதும்

சிங்கநிகர் காளையிரண்டு
சிவகங்கை பெற்றதுண்டு
சின்னமருது பெரியமரு தென்று
அவர்தாம் பெயருமுண்டு.....

நவாபு நாணயத்தை விரலால்
வளைக்கும் பெரியமருது - நற்
நாணயத்தை சொல்லால்
காக்கும் இளையமருது......

துப்பாக்கி யுடனின்றும் தொடை
நடுங்கும் பரங்கியர் முன்
வெறுங் கைகளால் வேங்கை
யடக்கிய வீரமறவர்.....

பகைவரு மெனத்தெரிந்தும்
ஊமைத்துரை காத்த உயர்வினர்- தமி
ழினமானம் காக்க இன்னுயிரும்
தரத்துனிந்த பன்பினர்......

வீழ்த்த வியலா வீரத்தமிழ
னெல்லாம் துரோகத்தால்
வீழ்வதுவே நம் சாபமன்றோ.....

குலதெய்வமென கும்பிட்டோனே
கும்பினியர்க்கு காட்டிகொடுக்க
சிங்கமிரண்டும் சிக்கியதுவே

பிடிபட்டார் துரோகத்தால்.....
தூக்கிலிடப்பட்டார் வஞ்சத்தால்......
அவ்வீரத்தின் எச்சம்கூட கூடாதென
ஐந் நூறோர்போல் சந்ததியினர்
கொன்று குவிக்கப்பட்டனரே....

வீரர்களை புதைக்க முடியுமா.....
விதைத்தார்கள் - இன்றுவரை
வீரமும் மானமும் பிறப்
பெடுக்கின்றன எம் வீரச்சீமையில்
ஒவ்வொரு பிள்ளைகளுமாய்.....

எழுதியவர் : முகில் (27-Oct-18, 9:35 am)
சேர்த்தது : முகில்
பார்வை : 164

மேலே