ஆண்டாள்

ஆண்டாள்

கோயில்கள்
சுற்றுலா செல்லும் இடங்களாயிற்று
சிலைகள்
களவாடப் படும் பொருட்களாயிற்று
குளங்கள்
குப்பை கூளங்களா யிற்று
கடவுள் தன்மை
நீதிபதிகளால் நிர்மாணிக்கப் படுகிறது
இறையுணர்வு
அரசியல்வாதிகளால் தீர்மானிக்கப் படுகிறது
கடவுள்
நாத்திகவாதிகளால் வரையறுக்கப் படுகிறார்
கடவுள் மறுப்பவனே
பெண்ணியவாதியும் புரட்சியாளனும்
ஆத்மாவின் உணர்தலின்றி
பரமாத்மாவின் புரிதலின்றி
மனிதம் மறந்து இயற்கை மறுத்து
உடலின்பமே உன்னதமென்று
காமமே கடைசிவரை என்றெண்ணும்
காமம்சூழ் பேருலகில்
ஆண்டாளும் தாசியாகிறாள்

எழுதியவர் : சூரிய காந்தி (27-Oct-18, 7:45 pm)
சேர்த்தது : சூரிய காந்தி
பார்வை : 93

மேலே