கவிக்கு கரு வேண்டும்

கவிக்கு கரு வேண்டும்

கருவொன்று இல்லாமல் தவிக்கின்றேன்
கவிதை வடிக்க தயங்குகின்றேன்
நிலவொன்று இல்லா உலகத்தில்
நிற்கதியாய் நானும் நிற்கின்றேன்

இரவு கொண்ட இளங்காற்றும்
துறவு கொண்டு போனபின்
மலர்ந்த பூக்களின் மணமிங்கு
கரைந்து காற்றில் கலைந்தபின்

உறைந்த பனியும் உள்வாங்கி
தொலைந்து போன மர்மமென்ன
ஆடிய மரக்கிளை அசையாமல்
சிலைபோல் மாறி நின்றதென்ன

குன்றும் மலையும் குணம் மறந்து
மண்ணில் மூழ்கி மறைந்ததென்ன
கருவை இழந்த எனக்கிங்கு
கவிதை பாட எனவுண்டு

தளர்ந்து போன மனதிற்கு
தருவாய் தமிழே ஓர் கருவே
நீயும் என்னை மறுதலித்தால்
எழுதா வாழ்வு எனக்கிங்கு
இல்லாது போனால் நலமுண்டு

எழுதியவர் : இளவல் (1-Nov-18, 9:51 am)
சேர்த்தது : இளவல்
பார்வை : 98

மேலே