ஒரு சொல்
நரம்பில்லா ஒற்றை நாக்கு
ஆக்டோபஸின் கரங்களாய்
திசைகொன்று நீளும்.....
சுற்றி சுழற்றி - எதிர்வரும்
நிலைக்கோர் சொற்களை
உதிர்க்கும்.....
அவை
சில நேரங்களில்......
அழுத குழந்தையை அள்ளி
மார்போ டணைக்கும் தாய்போ
லரவணைக்கும்.....
பசுமரம் சாய்க்கும் கொடும்
கோடாரியாய் மனம் வெட்டிச்
சாய்க்கும்......
நஞ்சினை நற்தேன் குழைத்துத்
தருதல் போல் நயந்து
கெடுக்கும்......
தேர்ந்தவன் கைத் தோட்டா
போல் குறி துள்ளியமாய்த்
தாக்கும்.....