நீயே நானாக
நான் நானாக இருக்க நினைத்தாலும்
நீயாகவே இருக்கிறேன்
என்னில் உன்னையே
காட்டிக் கொள்கிறேன்
உன் கண்களுக்கு
பிடித்தபடி
உடை உடுத்திக் கொள்கிறேன்
உன் நாவுக்குப் பிடித்தபடி
சமைத்துக் கொள்கிறேன்
உன் ரசனைக்கு ஏற்றபடி
தொலைக்காட்சி பார்க்கிறேன்
உன் இஷ்ட தெய்வத்தை
எனக்கும் இஷ்டமாக்கிக் கொன்டேன்
உன் கால் போகும் பாதைகளையே
என் பயணமாக்குகிறேன்
புவி