இளம் பஞ்சு மெத்தையென

இளம் பஞ்சு மெத்தையென
******************************************

நீலநிறப் பட்டுடுத்தி கோலாகல
மாய்நிற்கும் இமயத்தின் பொன்மகளே
இளம்பஞ்சு மெத்தையென இடபத்தான்
மடிதன்னில் மனங்குளிர அமர்ந்தவள்நீ
உலவுதென்றல் காற்றாக உன்கூந்தல்
சுகமளிக்க மலையோனும் மகிழ்ந்தவனே
மாலோனும் காத்துநிற்க அயனவனும்
கைகட்டி நிற்குமிடம் உன் இடமே -உந்தன்
கோலமிடும் வாசலிலே சரணடைந்த
அனைவர்க்கும் அருள்கூட்டி வைத்திடுவாய்

எழுதியவர் : சக்கரைவாசன் (19-Nov-18, 3:35 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 59

மேலே