முதுமொழிக் காஞ்சி 71

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்.
புகழ்வெய் யோர்க்குப் புத்தேணா(டு) எளிது. 1

- எளிய பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால்,, ஒருவர்க்குப் புகழ் விரும்பின் கடவுளர் வாழும் தேவலோகம் அடைதல் எளிது.

புகழை விரும்பி அறஞ்செய்தாரைத் தேவர்கள் தாமே வந்து உபசரித்து அழைத்துப் போவர்; ஆதலால் அறஞ்செய்தார் சுவர்க்கம் புகுதல் எளிதே என்பதாம்.

பதவுரை: புகழ் - கீர்த்தியை, வெய்யோர்க்கு - விரும்பினோர்க்கு, புத்தேள்நாடு - தேவலோகம் அடைதல்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Nov-18, 10:46 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 71

மேலே