10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - ஆய்வுக்குழு தலைவர் திரு பிரான்சிஸ் சவரிமுத்து அய்யா அவர்களுடன் கலந்துரையாடல்

பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - 2019 ஜூலை மாதம் சிகாகோவில் நடக்க உள்ளது . அதில் பங்குபெறப்போகும் ஆராய்ச்சி கட்டுரைகளை தேர்ந்தெடுக்கும் குழுவின் தலைவராக உள்ளவர் திரு பிரான்சிஸ் சவரிமுத்து அய்யா ,

இந்த ஆராய்ச்சி மாநாட்டினை பற்றி தெரிந்து கொள்வதற்க்காக சிறப்பு நிகழ்ச்சியை
அமெரிக்கா தமிழ் வானொலி ஏற்பாடு செய்திருந்தது . இந்த நிகழ்ச்சியில் நெறியாளராக , அய்யா பிரான்சிஸ் சவரிமுத்து அவர்களுடன் உரையாடினேன்.

மிக அற்புதமான மனிதர். இவர்தான் அமெரிக்காவில் முதல் தமிழ் சங்கமான சிகாகோ தமிழ் சங்கத்தை தோற்றுவித்தவர்களுள் ஒருவர் . இது தமிழகத்துக்கு மட்டும் இல்லாமல் தென்னிந்தியருக்கான முதல் சங்கமாகவும் இருந்துள்ளது .

நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் , அய்யா அவர்களுடன் மணிக்கணக்கில் உரையாடும் பெரும் வாய்ப்புக் கிடைத்தது .

மத நிகழ்ச்சிகளையோ , பண்டிகைகளையோ கொண்டாடக் கூடாது என்று சங்கத்தை தோற்றிவித்தபோது ஒரு சட்டமாக வைத்திருந்ததாக கூறினார் .

இப்போது அமெரிக்காவில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் எவ்வளவு தூரம் , முதல் தமிழ் சங்க சட்டத்திலிருந்து விலகி வந்துள்ளன என்பதனை நினைத்தால் வேடிக்கையாக உள்ளது ( பெரும்பானம்மையான தமிழ் சங்கங்களில் தீபாவளித்தானே மிக முக்கிய விழாவாக உள்ளது ? ) - இது எனது கருத்து மட்டும்தான் , அய்யா அவர்களுடன் இதனை நான் விவாதிக்கவில்லை .

எண்பது அகவைகளை தாண்டிய பின்னும் , திருக்குறளையும் , கிரேக்க மற்றும் பிற நாடுகளில் உள்ள தத்துவங்களையும் ஒப்பிட்டு ஒரு ஆராய்ச்சி நூலை இவர் எழுதிக் கொண்டிருக்கிறார் . திருக்குறளை பற்றி பேசும் போது அதன் பெருமையை எண்ணி எண்ணி தன்னை அறியாமல் கண்ணீர் வருகிறது என்று குரல் தழுதழுக்க கூறினார் .

நம்மிடையே இப்படியும் தமிழுக்காக வாழ்பவர்கள் இருக்கிறார்கள் .

இந்நிகழ்ச்சியின் கேள்வி பதில்கள் americantamilradio தளத்தின் archive பக்கத்தில் உள்ளது , தமிழ் ஆராய்ச்சி மாநாடு பற்றியும் , அய்யா அவர்களின் விரிவான பதில்களையும் நீங்கள் இங்கே கேட்கலாம் .

ATR Francis Savarimuthu on International Association of Tamil Research 2019 - இந்த தலைப்பில் youtube ழும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது .

-பாவி

எழுதியவர் : பாவி (5-Dec-18, 1:12 am)
சேர்த்தது : பாவி
பார்வை : 68

சிறந்த கட்டுரைகள்

மேலே