முட்டாள் அரசனும் ,முட்டாள் மந்திரியும் சிறுகதை

ஒரு ஊரில் ஒரு அரசன்
அவனின் மந்திரி மிகவும் புத்திசாலி
மந்திரியின் ஆலோசனை கேட்டுத்தான் அரசன் எந்த முடிவும் எடுப்பான்
ஒரு நாள் அரசனுக்கு மந்திரி சொன்னான் ,
நாம் எங்கு செல்லும்போதோ, நல்ல விஷயங்கள் தொடங்கும் போதோ
காகங்கள் இரண்டு ஜோடியாக இருப்பதை பார்த்து விட்டால்
நாம் செய்யும் விஷயங்கள், அல்லது செல்லும் இடங்கள் எல்லாம் துலங்கும் என்றான்.
அரசனுக்கு எப்படியும் நாம் அந்த ஜோடிக் காகங்களை பார்த்து விட வேண்டும்
என்ற ஆசை வந்து விட்டது. உடனே மந்திரியிடம் அமைச்சரே/ நீங்கள் சொல்வது போல் அந்த ஜோடிக் காகங்களை நீர் கண்டு விட்டால் எனக்கு உடனே தெரிய படுத்தும் என்றார்.
மந்திரியும் ஆமாம் என்றார்.
மறுநாள் அந்த ஜோடிக் காகங்கள் வந்து வெளியே இருக்கும் வீட்டு சுற்று சுவரில் அமர்ந்துகொண்டன..
மந்திரிக்கோ அளவற்ற சந்தோஷம் .
உடனே அரசனுக்கு காட்ட வேண்டும், அவர் மகிழ்ச்சியின் மீதியால் அள்ளி தரும் பரிசுப் பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆவலுடன் மகாராஜாவிடம்
சென்று மிகவும் பணிவுடன் அரசே/ நீர் கேட்டது போல் ஜோடிக் காகங்கள் வந்து விட்டது .
விரைந்து வந்து பாருங்கள் என்று அழைத்து வந்து காட்டினான்
ஐயோ அவன் பார்த்த போது இருந்த ஜோடிக் காகங்களில் ஒன்றைக் காணவில்லை
அவனுக்கு பயம் வந்து விட்டது. அரசன் தன்னை என்ன செய்யப் போகிறாரோ/
அவனுக்கு நெஞ்சம் படபடத்தது ,
,அரசன் அமைச்சரை பார்த்து நீ என்னை ஏமாற்றி விட்டாய்
இன்றுடன் நீ அமைச்சர் பதவியில் இருந்து விலகி விடு என்றார் .
பாவம் மந்திரி,அழுது கொண்டு வேகமாக வெளியேறினான்.
முட்டாள் அரசனும் ,முட்டாள் அமைச்சரும்

எழுதியவர் : பாத்திமாமலர் (8-Dec-18, 2:45 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 378

மேலே