மதிப்பு

மதிப்பு

மூன்றாயிரம் கவிதை எழுதிய
பூரிப்பில் படைப்பாளி

அத்தனையும் வைரம்
என்றார் துதிபாடிகள்

முன்னூறு தங்க மலர்கள்
என்றான் ரசிகன்

முப்பது தேறும் மற்றது சேதாரம்
என்றான் விமர்சகன் -

கறாராகச் சொன்னான் வியாபாரி
மூனரைக் கிலோ !

எழுதியவர் : Dr A S KANDHAN (10-Dec-18, 10:19 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 91

மேலே