மதிப்பு
மதிப்பு
மூன்றாயிரம் கவிதை எழுதிய
பூரிப்பில் படைப்பாளி
அத்தனையும் வைரம்
என்றார் துதிபாடிகள்
முன்னூறு தங்க மலர்கள்
என்றான் ரசிகன்
முப்பது தேறும் மற்றது சேதாரம்
என்றான் விமர்சகன் -
கறாராகச் சொன்னான் வியாபாரி
மூனரைக் கிலோ !