கோடி நன்றி
கோடி நன்றியடி உனக்கு - நான் கோமாளி இல்லையடி இனி உனக்கு.
அதிகாலையில் எழுவேனே உனக்காக - இனி அந்திமாலை வரை துயில் வேனே எனக்காக .
டெய்ரிமில்க் வாங்கி டெய்லி வருவேன் உன்னை பார்க்க .
நீ என்னை பிரிந்து சென்றதால் ...
வங்கியில் இருக்கு பணம் மிகுதியாக .
செல்லுக்கு ரீசார்ஜ் செய்தே சில்லு சில்லாய் உடைந்தேன்
நீ ஆன்லைன் வருவாய் என்று ஆந்தை போல் கண் விழித்தேன் .
பிறந்தநாளுக்கு ஆடை கேட்டு குழந்தை போல் அடம்பிடிப்பாய் .
பிரியாணி வாங்கி தந்தால் பீட்சா தான் வேண்டும் என்பாய் .
கால் தடுக்கி நான் விழுந்தால் கண்ணில்லை என்று சொல்லுவாய் .
கிரிக்கெட்டில் சதம் விழுந்தால் விராட் கோலியை புகழ்ந்து தள்ளுவாய் .
போதுமடி உன் கதை .
நீ காதல் வலி தந்ததை விட காதலித்த போது தந்த வலியே என் நெஞ்சை உருக்குகிறது .
காதலால் என் லைஃப் ஆல் கிளியர் .
அதனால் தான் இஞ்சினியரிங்கில் நான்கு அரியர் .
போதும் .
போதும் .
இந்த சோகம் .
காதலித்த நேரத்தை கணக்குக்கு செலவழித்திருந்தால் இந்நேரம் T.C.S இல் பிளேஸ் ஆயிருப்பேன் .
பராவயில்லை .
இபாபோதாவது பிரிந்து சென்றாயே.
உனக்கு கோடி நன்றியடி .
இனி என் வாழ்க்கை 1000 வால்ட் பல்பு போல் மின்னுமடி .
நன்றி . நன்றி .. நன்றி ...