நீயும் பாரடா

(2019- எனது முதல்க் கவிதை #புரட்சிக்கவிதை) 😊


வீரத்தின் உரமிட்ட நெஞ்சமடா /
வீரியம் நிறைந்த பால் அருந்திய தமிழனடா/
விழுந்தாலும் எழுந்து விடுவானடா/
வீழ்ச்சி கண்டு முயற்சி தொலைக்க மாட்டானடா/

உயிரைத் துச்சமென நினைப்பானடா/
உயிர் கொடுத்து தமிழை மீட்கும் தோழனடா/
உயிர்த்தெழுந்ததுமே உரிமையைக் கேட்பானடா /
உறங்கும் வேளையிலும் விழியிலே உலாவிடும் வீரக் கனவு தானடா/

அச்சம் விதைக்காத ஈழ மண்னடா/
அழிவது தான் தமிழனுக்கே வெட்கமானதடா/
அடிமை வாழ்வை மீட்கத் துடிப்பவனடா/
அரக்கர்கள் இரத்தம் குடிப்பானடா/

எதிர்ச் சொல் உரைப்பானடா /
எதிரியை எதிர்த்து நிற்பானடா /
எரிமலையாய் வெடிப்பானடா /
எருமைகளின் கோட்டையைத் தகர்ப்பானடா/

நாடு காக்கத் துடிப்பானடா/
நாட்டுக்காக மாண்ட வம்சமடா/
நாடி நரம்பெல்லாம் எழும்புதடா/
நாளும் பொழுதும் நாங்கள் தமிழன்
என்று உரக்கக் கூறும் வேளையிலே
நீயும் பாரடா //

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (2-Jan-19, 7:59 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : neeyum paarada
பார்வை : 94

மேலே