எப்போது முதல் ம்
உறவுமுறைக்குப் பெயர் வேண்டாம்
என்கிறதே ஒரு மெளனம்
எப்போது முதல் ம்
அனுராகம் தழுவிய
அப் பாதிராத்திரிக்குப் பிறகா ம்
நில் போகாதே
அழைத்ததற்கான
காரணம் சொல்லிவிடுகிறேன்
சுபதம் தருகின்ற
அழகோடும்
வாசாலமான கவிமனதோடும்
என்னையே
உலாவருகிற உன்னிடத்தில்
ஒரு குறை இருப்பதைக் காண்கிறேன்
உருகும் போது
குறுகும் புருவங்களுக்கிடையில்
துளிக் குங்குமப் பொட்டுடையக்
குறைவுதான் அது ம்
தடுக்காதே
பாக்கியமின்றி இறப்பேனானால்
நுதலாடும் சிந்தூரம்
பிறவி உதிராமல் காத்திரு,
இதற்காகவே பிறந்துவரும்,
அவதாரமாகிறேன்,
அனுசரன்