என்னவள்

பண்பான சீரான உந்தன் பார்வை
என் மனதை கவர்ந்திட நமக்குள்
காதல் உறவு உருவானதுஎன்றால்
உன் அன்பிலும், அரவணைப்பிலும்
தாய்மையைக் கண்டேன் ,நீ
ராகத்தின் ஷட்ஜமம், பஞ்சமும் போல்
உன் அன்பாலும் , பண்பாலும் நம்
காதல் வாழ்க்கைக்கு ஓர்
கட்டிடமே கட்டி காத்து நிற்கின்றாயடி என்னவளாய்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Jan-19, 11:21 am)
Tanglish : ennaval
பார்வை : 312

மேலே