தையும் வந்தாள் வாழ்த்திட
பானையில் பொங்கலும் பொங்குது பார்பாங்காய்
மானை நிகர்த்த மலராள் இலையிலிட
கைவளையல் ஓசை தரகவி தையென
தையும்வந் தாள்வாழ்த் திட !
சிறப்புப் பொருள் :
கைவளையல் கவிதையென ஓசை செய்தன என்றும்
பொருள் கொள்ளலாம்.
கவிதையென தையும் வந்தாள் வாழ்த்திட என்றும்
பொருள் கொள்ளலாம் .
இரு பொருளிலும் இலையிலிட்ட பொங்கலை உண்டால்
பொங்கல் இன்னும் இனிக்கும் .
---இனிய பொங்கல் வாழ்த்துக்களுடன்
அன்புடன்,கவின் சாரலன்