வருமா வசந்தம்
செங்கரும்பும்
சர்க்கரை பொங்கலும்
கசக்கிறது
வாசமல்லியும் சுடுகிறது
நீ என்னோடு இல்லாத
இந்த காலங்களில்...
நீயா நானா
என்ற ஈகோவுடன்
காலங்கள் கழிகிறதே...
ஒன்றும் அறியா
நம் பிஞ்சுமுகத்தை காண
என்ன கோபம் உமக்கு...
வருமா அந்த வசந்தகாலம்
மீண்டும் என் வாழ்விலே
என்னங்க என்னங்க
என்று சொல்லி அழைக்க
தை பிறந்தது இனி வழி பிறக்குமா...