சிறந்த காதல் கவிதை

❤🌻❤🌻❤🌻❤🌻❤🌻❤

*காதல் கவிதை*


*கவிஞர் கவிதை ரசிகன்*

❤🌻❤🌻❤🌻❤🌻❤🌻❤

பெண்ணே
தாய் மொழிக்கு உயிரெழுத்து பனிரெண்டு...
என் கவிதை மொழிக்கு
உயிரெழுத்து
உன் கண்கள் இரண்டு...

கண்ணாடியின்
முன் அமர்ந்தாள்
உன் அழகை மட்டும் அறியலாம்
என் முன்னால் அமர்ந்த பார்
உன்னையும் சேர்த்து அறியலாம்...

நீ எனக்குள்
புதைந்து இருக்கிறாய்...

என் எழுதுகோலின் உயிர் நீ.....

உன்னை பார்த்த பிறகு
உலகம்
எனக்குள் வந்து விட்டது
ஆனால்
நான்
உன் கைகளுக்குள்
அடங்கி விட்டேன்

ஆணிவேராய்
என் மனதுக்குள்
நீ
ஊடுருவி சென்றுவிட்டாய்
இன்னும் செல்கிறாய்
செல்வாய்....

தண்ணீர்போல்
நீ
என்னை
தூய்மைப்படுத்தினாய்...

உன்னை
பொழுதெல்லாம்
பார்த்த பின்பும்
போதுமென்ற
சொல்லவில்லை
என் விழிகள்

இரவும் பகலும்
ஒன்றாகிவிட்டது
உன்னால்....

அணிகலன்களை
அணிந்து
உடம்பை அழகு படுத்துவதோடு
என்னையும்
உன் இதயத்தோடு
அணிந்துகொள்
உன் பெண்மையும் அழகு பெறும்...!!

கவிதை ரசிகன்

❤🌻❤🌻❤🌻❤🌻❤🌻❤🌻

எழுதியவர் : கவிஞர் கவிதை ரசிகன் (21-Jan-19, 9:19 pm)
பார்வை : 182

மேலே