சாரதிப் பெண்ணாள்

குளத்து மீன்
போல் துள்ளுகிறாள் /
என் உள்ளக்
குளத்தினிலே நீந்துகிறாள் /
கிணற்றுத்தவளை போல் விளையாடுகிறாள் /
என் விழிக்
கிடங்கினிலே உலாவுகிறாள்/

சிரிப்பினாலே கொட்டும்
பனி போல் குளிர் மூட்டுகிறாள் /
காதல் நரம்புக்குத் தீ காட்டுகிறாள் /
வங்கக் கடலாக பொங்குகிறாள்/
எனது இதயக்
கரையைத் தாக்குகிறாள்/

உணர்வுமிக்க உரை நடத்துகிறாள் /
உடலுக்குள்ளே உணர்ச்சியைத் தூண்டுகிறாள் /
ஊர்வன
போல் நெஞ்சினிலே ஊர்கிறாள்/
ஊருக்குள் வினை தேடுகிறாள் /

சாரதிப் பெண்ணாள் /
தன் கண்ணால் போதை ஏற்றுகிறாள்/ சரக்கடித்தவனைப் போல்
எனக்குள் தடுமாற்றம் காட்டுகிறாள் /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (26-Jan-19, 5:38 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 55

மேலே