விழியழகில் மதி மயங்கி

நீயோ கண்ணாடியில்
உன் முகம் பார்க்கிறாய்..
நானோ உன் முகத்தினில்
என் முகம் பார்க்கிறேன்..

உன் விழியழகில் மதி மயங்கி
இதழழகில் இந்திர லோகம்
செல்கிறேன்...

முக்கனியும் ஒரு சேர திகட்டா
மேனி கண்டு மனது கொஞ்சம்
தடுமாறுகிறேன்..

கனிகளை கொய்திட
கைகள் பரபரத்தாலும் காதலால்
கட்டுப்படுகிறேன்....

உன் புன்னகை ஒன்றுக்காக
என் நிலை மறந்து உன் நினைவாய்
தவம் கிடக்கிறேன்...

படைத்தவன் பிரம்மனென்றாலும்
செதுக்கிய உன் பெற்றோரைக்
கண்டு நான் பிரமிக்கிறேன்...

எழுதியவர் : ஜெய் ரெட்டி (30-Jan-19, 11:26 am)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
பார்வை : 700

மேலே