ஆண்

சுமைகளை
சுகமாக தாங்கும்
அதிசயப்பிறவி ஆண்...

மனதில் ஆயிரம்
வலி இருப்பினும்
தன்னுள்ளே புதைப்பவன் ஆண்...

தனி மரமாய்
தரணியில் எங்கும்
தாவித்திரிந்து
இரை தேடும் உத்தமன் ஆண்...

ஆயிரம் எதிர்பார்ப்புகள்
ஆயிரம் ஏமாற்றங்கள்
பல நூறு அசிங்கங்கள்
தொட்டும் பட்டும்
உறவுகளுக்கு
தொந்தவில்லாமல்
வாழும் ஜீவன் ஆண்....

விட்டுக்கொடுப்பில்
முதன்மையாகவும்,
விசுவாத்தில் குழந்தையாகவும்,
பாதுகாப்பில் வீரனாகவும்,
கண்ணியமாகவும்,
கடமை தவறாதவனாகவும்,
தன்னை வருத்தி உழைக்கும்
உழைப்பாளியாவும்,
வாழ்பனே ஆண்....

கல்லென்றும்
கலங்காதென்றும் -கூறும்
ஆணின் இதயறை
பெண்மையிலும் பார்க்க
மென்மையென்பதை
உணர்ந்தே அறிய வேண்டும் ......

எழுதியவர் : பொத்துவில் அஷ்ரப் (31-Jan-19, 3:37 pm)
சேர்த்தது : Mohammed Ashraf
Tanglish : an
பார்வை : 286

மேலே