அண்ணாந்து அசைபோடும் ஆவினம்போல்
அண்ணாந்து அசைபோடும் ஆவினம்போல்
***************************************************************************
உண்ணும் உணவையெல்லாம் உண்டபின் நன்கமர்ந்து
அண்ணாந்து அசைபோடும் ஆவினம்போல் நெஞ்சுள்பாய்
எண்ணங்கள் சென்றுவருவ தெண்ணி அலுப்பதுவோ ?
அண்ணலவன் நினைவில்நீ இசைந்தே அசைபோட
மண்ணுலகில் வாழும்வரை இன்பமே துன்பமிலை !