அகிலன் குட்டி கதை

....... மா மரத்தின் பொறாமை................

"மாமரம் ஏன் சோகமா இருக்க ?" என்று கேட்டது வேப்ப மரம்.
"எனக்கு ஒரு செடியை பார்த்து பொறாமையா இருக்கு" என்று மாமரம் சொன்னதும்
வேப்ப மரம் கிளைகளை குலுக்கி குலுக்கி சிரித்தது. பிறகு சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு
"நீ முப்பது வருசம் பழைய மரம் மூணு மாச செடியை பார்த்தா பொறாமை படுற,
நான் அந்த செடியை பார்க்கனுமே" என்று சொல்லி செடியை குனிந்து தேடியது.
மாமரம் அதன் கிளைகளை உயர்த்தி "அதோ! அந்தா தெரியுது பார்" என்று சொன்னதும்
வேப்ப மரம் பார்த்தது
இரண்டடுக்கு மாடியின் மேலே வளர்ந்திருந்தது அந்த செடி.

எழுதியவர் : பேய்க்கரும்பன்கோட்டை அகி (2-Feb-19, 3:06 pm)
சேர்த்தது : AKILAN
பார்வை : 140

மேலே