முத்துக்குமரன் அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

பால முருகனைப் பாருங்கள் அவன் பதமலர் போற்றிப் பாடுங்கள்

வேலை ஏந்திய வேலனிடம் வேண்டியதெல்லாம் கேளுங்கள்

தேனாம்பேட்டையிலே பால சுப்ரமணியன் அவன்

வைத்தீஸ்வரன் திருக்கோவிலில் செல்வ முத்துக்குமரன் அவன்

கீழ்வேலூர் எனும் தலத்தினிலே கோயில் கொண்ட திருமுருகன்

நவலிங்கங்களை பூஜை செய்த பால சுப்பிரமணியா வா

அருள்மிகு ரத்னகிரியினிலே பாலமுருகன் திருக்கோயில்

குளஞ்சியப்பரெனும் திருப்பேரில் மணவாள மஞ்சூரில் அவன் கோயில்

பழநிமலை அடிவாரத்திலே ஆவினன்குடி கோவிலிலே

குழந்தை வேலாயுத சுவாமியென புன்னகை புரிவான் ஷண்முகனே !!!


-------------------------------------------------------------------------------------------------------
க்ரிஷ் .சுனில் குமார்

எழுதியவர் : (2-Feb-19, 7:24 pm)
பார்வை : 55

மேலே